கொங்கு பகுதி வெள்ளாளர்/வேளாளர்கள் பற்றிய தொடர் கட்டுரை!!!!!

தொடர் கட்டுரை 1 :

 

*கொங்க வேளாளர்களும் பெயர்கள், பட்டங்கள், சின்னங்கள்:*

பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு குலமும்(சாதி) தனக்கென பல சிறப்பம்சங்களுடன் விளங்குகின்றன.

 



உலகில் பல தொழில்கள் நடந்தாலும் அவற்றிற்கெல்லாம் அச்சாணியாய் விளங்குவது உழவே. *’சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்’* என்பது திருவள்ளுவ நாயனார் வாக்காகும்.

 

வெள்ளாளர்களின் முதல் தொழில் உழவு என்பதை அறிவோம். அப்படி உழவை முதல் தொழிலாகக் கொண்ட கொங்க வேளாளர்களுடன் தொடர்புடைய முக்கியமான சின்னங்கள், பெயர்கள், பட்டங்கள் பற்றிப் பேசுவது இப்பதிவு.

 

*1) கங்கை குலம் / காங்கேயர்:*

– வேளாள முதல்வன் கங்கைக் கரையில் பிறந்ததால் கங்கை குலம் என்றனர்.

– கங்கையின் பிள்ளைகள் என்பதால் காங்கேயர் என்றனர்.

 

*2) பூதேவி புத்திரர் / மண்மகள் மைந்தர்:*

– கங்கைக் கரையில் பூமியில் இருந்து தோன்றியதால் பூமி தேவியின் புத்திரர்கள் எனப்பட்டனர்.

– பூதேவிக்கு மண்மகள், நிலமகள் என்று பெயர்; மைந்தர் – பிள்ளைகள் என்பதால் மண்மகள் மைந்தர்.



 

உழவிற்கு *நீரும்(கங்கை)*, *நிலமும்(பூமி)* முக்கியம் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.

*3) நற்குடி 48,000 / நாற்பத்தெண்ணாயிர கோத்திரத்தார்:*

– உலகம் உய்ய நற்குணங்களுடன் தோன்றியதால் நற்குடி எனப்பட்டனர். – பொதுவாகவே வேளாளர்கள் அனைத்து குடிகளினும் குணமிக்கவர்கள் என்பது பொதுக் கருத்து.

– 48000 கோத்திரங்கள்(கூட்டம்) வேளாளரில் உண்டாம். கொங்க வேளாளரின் பல பட்டயங்கள் கல்வெட்டுகள் இவ்வாறு கூறுகிறது.

 

*4) சித்திர மேழியர் / ஏரின் வாழ்நர்:*

– தங்க நிறத்தில் ஒளி வீசும் ஏர்க் கலப்பைக்கு சித்திர மேழி எனப்படும்.

– நாட்டாட்சி செய்யும் வேளாளர்கள் சித்திர மேழி வைத்திருப்பர்.

– ஏர் என்னும் கருவியே உழவிற்கு முதன்மை ஆதலால் ஏர் கொண்டு வாழ்பவர் என்றனர்.

– ஏர்க் கலப்லையை *’மேழி’* என்றும் அழைப்பர். வடமொழி எனப்படும் சமஸ்கிருதத்தில் *’முர்தகம்’*,  *’ஹலம்’* என்று அழைப்பர்.

 



*5) வேள் / வேளான்:*

– *’வேள்’* என்றால் *ஒளிமிக்கவன்* என்று பொருள். *’ராஜா’* என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாகும்.

– கொங்க வேளாளர்களை *தமிழ வேள், மூவேந்த வேளான், வஞ்சி வேள், இஞ்சி வேள்* என பல கல்வெட்டுகள் கூறுகின்றன.

*6) வெள்ளாளன் / வேளாளன்:*

– ஒளியுடைமையை ஆள்பவன் என்று பொருள். *ஒளியுடைமை என்பது குடிகளைக் காப்பதாகும்.* ஊர் தோறும், காணி தோறும், நாடு தோறும், மண்டலந் தோறும் குடிகள் அனைவரையும் தம் திறத்தால் *18 குடிகளையும் காக்கும் குடி* என்பதால் வெள்ளாளர் எனப்பட்டனர்.

 

*7) காராளர்:*

கார் என்பது *கரிய மழை மேகங்களைக்* குறிப்பதாகும். மழை பெய்யும் நீரை உழவினால் உணவாக்கி உலகிற்கு உயிரூட்டுவதால் காராளர் என்று பெயர்.

 



*8) பெருக்காளர்:*

– ஏரினால் நாட்டின் வளம் பெருக்குவது வேளாளர் குணமாகும்.

– முற்காலத்தில் உழவினால் பெரும் செல்வத்தில் தான் நாடுகளும் அரசுகளும் செழித்தன.

– *வளத்தை பெருக்குபவர் பெருக்காளர்.*

– *வெள்ளப் பெருக்கினால் வரும் நீரை ஆண்டு உழவு செய்பவர்* என்றும் கூறுவர்.

*9) தாளாளர்:*

– தாளாண்மை என்பது தாளாமல் ஆளும் தன்மை. *அயராது உறுதியான விடா முயற்சி உடையவர்* என்பதால் தாளாளர் எனப்பட்டனர். 

 

*10) வாய்மையாளர்:*

– வேளாண் குடியின் மிகப் பெரும் சிறப்பம்சம் உண்மை பேசுவதாகும். உழவு செய்பவர்களே *ஓரிடத்தில் நிலைத்து வாழ்பவரும், கைமாறு கருதாது அடுத்தவருக்கு வழங்குக் பெரும் உள்ளம் உடையவரும், தமக்குக் கீழ் உள்ள 18 குடிகளை நீதி முறைப்படி காப்பவர்கள்* ஆவர். அதனால் இயற்கையாகவே *பொய், புரட்டுகள் பேசாதவர்கள்* என்று அறியப்பட்டவர்கள்.

– பழஞ்சுவடிகள் வேளாளர்களின் பெயராக *வாய்மையாளர், வார்த்தை ஆடலில் வல்லவர்கள்* என்று கூறுகின்றன.

– மன்னர் ஆட்சியில் பல தீர்ப்பு சாசனங்களில் *வெள்ளாளர்களே சாட்சி கையொப்பம் இட்டுள்ளனர்* என்பது கூடுதல் சிறப்பு.

 

*11) கொங்கர்:*

– *கொங்கு நாட்டின் குடிகள்* கொங்கர் எனப்படுவர்.

– கொங்கன் என்ற சொல் *கங்கை என்ற சொல்லின் திரிபு* என்பர். முன்னர் *கங்க தேசமாக* இருந்தது பின் *கொங்க தேசம்* ஆனது.

– கொங்கன் என்பது *சேர மன்னனின் பெயராகும்*. கொங்க வெள்ளாளர்கள் அனைவரும் *சேர மன்னனின் வழித்தோன்றல்கள்* என்று ஒரு செப்பேடு கூறுகிறது.

 

*12) கவுண்டர்:*

– கவுண்டர் என்பது *’காமிண்டன்’* என்ற சொல்லின் திரிபாகும்.

– *’கா’* என்றால் காப்பவன், *’மிண்டன்’* என்றால் வீரன். காமிண்டன் என்றால் *காக்கும் வீரன்* என்று பொருள். இது க்ஷத்திரியர்களின் பட்டம் ஆகும்.



– காமிண்டன் மருவி பின்னாளில் *காமுண்டன்* ஆகி, பின் *கவுண்டன்* ஆனது.

 

இத்தனை பெருமை மிகு குலப் பெயர்களையும், பட்டங்களையும், சிறப்புப் பெயர்களையும் உடையவர்கள் வேளாளர்கள்.

 

இப்பெருமைகளை வாயாரப் பேசுவதாக மட்டும் இல்லாமல் முடிந்த வரை நமது அன்றாட ஒழுக்கத்தில் கொண்டு வர முயற்சிப்பதே நம் முன்னோருக்கும் பின்னோருக்கும்    நாம் செய்யும் சிறப்பாகும்……!!!!  

தொடரும்!!!!!

 

வாழ்க #வெள்ளாளர் இனம்!!! வளர்க #வெள்ளாளர்!!! புகழ்
நமக்கான ஒரே ஊடகம் VOC TV, வெள்ளாளர்களின் விடியலை நோக்கிய ஒரு பயணம்,நம் இன ஒற்றுமைக்கு பாடுபடுவதே எங்கள் இலட்சியம் அதற்கு உங்கள் ஆதரவு எப்பொழுதும் தேவை அதற்கு VOC TV-ஐ SUBSCRIBE செய்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுகொள்கிறோம்.
SUBSCRIBE VOC TV : https://www.youtube.com/channel/UCzsBAYfbWxtxOE-DclmBzkQ

website
mp3songs,videos: https://www.vocayya.com/

FACEBOOK LIKE ME : https://www.facebook.com/tnvocnews/

TWITTER FOLLOW ME : https://twitter.com/tnvocnews

Email – tnvocnews@gmail.com

* ANTI-PIRACY WARNING * This content is Copyright to VOCTV. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
Thank You.
Copyright 2019 @VOCTV. All rights are Reserved.
**********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.

Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
**********************
#tnvocnews
**********************

எழுத்தாளர்!

காளிமுத்து வேளாள கவுண்டர்!!!!

மேலும் தொடர்புகளுக்கு : 9629908758

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *