ஊற்றுவளநாட்டு வேளாளர்களின் கோத்திரப்பெயர்கள் :

ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் பற்றின கட்டுரை : 

 

ஊற்றுவள நாட்டு வேளாளர்கள் தங்களை திருநெல்வேலியில் இருந்தே சோழநாட்டிற்கு இடம்பெயர்ந்ததாக கூறுகிறார்கள் ,மேலும் தாங்களும் சைவ வேளாளர்கள் தான் என்கிறார்கள் !! (ஆனால் ஆதாரம் தேவை)

ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் சைவ உணவு பழக்கமுறையை பாரம்பரியமாக கொண்டவர்கள்!  




திருநெல்வேலியில் இருந்து சோழநாட்டில் இவர்கள் குடிபுகும் போது சோழநாட்டில் பஞ்சம் நிலவியதாகவும் , எங்கையும் மழை பெய்யாமலும் ,ஊற்று தண்ணீர் கூட பூமியில் இருந்து கிடைக்கப்பெறாமலும் சோழ நாட்டு மக்கள் அவதியுற்றுள்ளனர், அந்த நேரத்தில் தான் ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் தாங்கள் குடியேறிய பகுதிகளில் தண்ணீருக்காக தோண்டும் போது தண்ணீர் ஊற்று போல் பெருக்கெடுத்து ஓடியதாகவும், அதனால் அங்கே இருந்த மன்னர் ஊற்றுவளநாட்டு வேளாளர்களுக்கு பல்வேறு கிராமங்களை தானமாக வழங்கி, தண்ணீர் பெருக்கி, விவசாயம் பெருக்கி சோழநாட்டினரின் பஞ்சம் போக்க வேண்டி கொண்டதாகவும் , அதன் பொருட்டு ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் பல்வேறு விவசாய பணிகளை மேற்கொண்டு மக்களின் பசிபிணியை தீர்த்ததாகவும் செவி வழி தகவல்கள் உள்ளன !!! சோழநாட்டில் ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் பெரும் நிலவுடைமையாளர்களாக  உள்ளனர் !!!

 

ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் இன்று பிள்ளை பட்டமே பயன்படுத்துகின்றனர் !!

மிகவும் ஆச்சாரமானவர்கள், தீட்ஷை பெற கூடியவர்கள், மிகவும் ஒழுக்கமுடையவர்கள், மிகப்பெரிய பண்பாடு, பாரம்பரிய ,கலாச்சார, பழக்கவழக்கங்கள் உடையவர்கள் !!

ஊற்றுவளநாட்டு வேளாளர்களின்  கோத்திரங்கள் :

1.வரவுடையார்

2.களப்புடையான் அல்லது களப்பாலுடையான் 

3.லங்கேஷ்வரன் 

4.கலப்பை உடையான்

5.வழிதளம்பாடியான்

6.கிளியுடையான்

7. ஆமரசு உடையார்

8. கீர் உடையார்

9. சாத்திரமுடையான்

10. வழித்தலம்பாடியான்

11. கூத்தருடையான்

12. ஆறுடையார்

13 . சாத்துடையார்

14. சிவகோத்திரம்




இன்னும் பல 

 

தேடல் நகர்கிறது!! !

 

ஊற்றுவளநாட்டு வேளாளர்கள் பற்றின வேறு ஏதேனும் தகவல்கள் யாருக்கேணும் கிடைக்கும் பட்சத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 

ஒட்டப்பிடாரம் சைவச்செல்வன்.கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 



Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *