பௌத்தம் என்ற புத்த மதம் சாதி குறித்தும், வர்ணபடி நிலை குறித்தும் சொல்வது என்ன? அம்பேத்கார் புத்த மதம் சொன்ன சிலவற்றை மறைத்து விட்டு எழுதினாரா? சாதி ஏற்ற தாழ்வுகள் எதனால் வந்தது?

தலித்தியவாதிகளின் பௌத்த பாச நாடகம் தகர்த்தெரியப்படுகிறது – பாகம் 1:

சூத்திரர் உருவான விதம் பற்றி தன் வாயால் செப்பினான் புத்தன்!!! புத்தன் பார்வையில் ஏழு வகை சூத்திரர்கள் யார்? அதுதான் முதல் பாகம்… திராவிடர் எல்லாம் சூத்திரர் என்று பொய் சொல்லிய ஈவேரா புத்தரை திட்டுவதாக்தான் அதிகம் நாடகமாடி இருக்க வேண்டும்? ஏன் என்று பார்ப்போம்…

அம்பேத்கரே கூட க்ஷத்ரியர்கள் தான் சூத்திரர் ஆனார்கள் என்று தர்ம சாஸ்திர சான்றுகள் கொண்டு சொன்னதற்கு இங்கே தமிழ்நாட்டு தீவிரவாதிகள் அதனை ஏற்க மறுத்தனர்… மாறாக சூத்திரர்களை மேல் மூன்று வர்ணத்தினரும் ஒடுக்கிவிட்டனர் தாழ்த்திவிட்டனர் என்று அம்பேத்கர் சொன்ன கருத்தை மட்டுமே பிடித்துக்கொண்டு காழ்ப்புணர்வையும் வெறுப்புணர்வையும் ஊட்டி ஊட்டி வளர்ந்தார்கள்… தவறு… ஆனால் புத்தனே தன் வாயால் சூத்திரர் எப்படி உருவானார்கள் என்று சொன்னால்? ஆம்… சொல்லியுள்ளார்…

அதுமட்டுமல்ல… இந்த புத்தனானவன் அறம் வழுவாத வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்குவது மட்டுமல்லாது முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்தியுமுள்ளான்… ஆக புத்தன் வர்ணாசிரமத்தை எதிர்க்கவே இல்லை… ஆனால் பிராமணத்தன்மையை புத்தனது காலத்தில் இழந்திருந்த ஏகதேச (சண்டாள) பிராமணர்களைத்தான் எதிர்த்துள்ளான் புத்தன் என தெளிவாகிறது… அதுமட்டுமல்லாமல் தங்கள் அறத்தில் இருந்து வழுவிய நால்வர்ணத்தையுமே புத்தன் எதிர்த்தான்… அறம் வழுவாத அளவுக்கு ஒரு வழியை உருவாக்க வேண்டும் என்று எண்ணினான்… முன்னர் இருந்த வர்ணாசிரமம் சிறந்த (புத்தன் கொடுத்த சான்றிதழ்) முறையே என்றாலும் அதைவிட மிகச்சிறந்த முறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று சமத்துவம் போற்றும் சமயத்தை உருவாக்கினான் புத்தன்… அதனோடு கொல்லாமை முதலிய பல ஒழுக்கங்களையும் சேர்த்தே போதித்தான் புத்தன்… வேதங்களையும் வேள்விகளையும் தாண்டி ஒழுக்கமாய் வாழ்ந்தாலே உயர்வு கிட்டும் என்று நிறுவினான் புத்தன்…

சரி… புத்தன் வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கி, முட்டு கொடுத்து தூக்கி நிறுத்திய வரலாற்றை பார்ப்போம்…

புதுமைகளை புகுத்தாமல் புத்தனது பழமையான சித்தாந்தத்திலேயே லயிக்கும் பிரிவான தேரவாத பௌத்தத்தின் சாஸ்திர நூல்களில் முக்கியமானதான தீக நிகாயம் (Digha Nikaya) என்ற நூலில் 27 ஆம் சூத்திரமான அக்ஞான சூத்திரத்தில் (Aggañña Sutta) நால் வர்ணம் எப்படி உருவானது என்று வரலாறு பகிர்கிறார் புத்தர்…

தீக நிகாயம் 27 ஆம் சூத்திரத்தின் மூன்றாம் பாகத்திலே, புத்தர் பேசுகிறார்:

என்னை கேள்வி கேட்கும் வாசேத்தனே / Vāseṭṭha (வசிஷ்டர்) & பரத்வாஜனே! உரைக்கிறான் கேள்…

உலகில் நெல் வயல்களில் விவசாயிகள் பயிரிட்டு விவசாயம் செய்யப்பட துவங்கியதால் ஒருவரின் நிலத்தில் விளைந்த நெல்லை இன்னொருவர் திருடவும் செய்யத் துவங்கினர்… நில உரிமையாளர் திருடர்களை பிடிக்கும்போது இனி செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டு மீண்டும் மீண்டும் செய்துகொண்டே இருந்தனர்… நில உரிமையாளர்கள் அந்த திருடர்களை அடுத்து கையால் அடித்தனர், கல்லால் அடித்தனர், தடியை வைத்து அடித்தனர் ஆனால் எதற்கும் திருடர்கள் திருட்டை நிறுத்தவேயில்லை…

பிறகு நில உரிமையாளர்கள் குழுவாக கூடி ஒரு முடிவெடுத்தனர்… திருடர்களை பாராபட்சம் இன்றி தண்டிக்கும் ஒருவரை, ஊரை விட்டு – குழுவை விட்டு அந்த திருடனை ஒதுக்கி வைக்க ஒருவரை ஏன் நாமே ஒரு நபரை தேர்ந்தெடுக்கக் கூடாது? அவருக்கு நாம் ஒவ்வொருவர் நிலத்தில் விளைந்த நெல்லின் ஒரு பாகத்தை கொடுத்து கௌரவிப்போமே! என்று முடிவெடுத்தனர்… இப்படியாக விவசாயிகள் தங்கள் குடியிலேயே மிகுந்த வசீகரமான, மிகுந்த அழகான, மிகுந்த அன்பான, சாலச்சிறந்த, வீரமுள்ள ஒருத்தரை சந்தித்து “சரியானவரே, நீங்கள் காக்க வேண்டியவர்களை காத்து, தண்டிக்க வேண்டியவர்களை தண்டித்து, ஒதுக்கிவைக்க வேண்டியவர்களை ஒதுக்கி வைக்க வாருங்கள்” என அழைத்தனர்… அழைப்பை ஏற்று அவர் அரசன் ஆனான்… இந்த அரசனுக்கு மக்களால் இவன் தேர்ந்தெடுக்கப்பட்டதால் “மகாசம்மதன் / Mahāsammata” என்று பெயர் வந்தது… (சமஸ்கிருதத்தில் மகா சாமந்தன்)… பிறகு நெல் வயலுக்கு அதிபதி என்ற பொருளில் “க்ஷத்தியன்” என்று பெயர் வந்தது… (சமஸ்கிருதத்தில் க்ஷத்ரியன்)… பிறகு அரசன் தனது காக்கும் தண்டிக்கும் ஒதுக்கும் தர்மத்தால் பிறரை இன்புற வைப்பதால் அதன் பொருளில் அவனுக்கு “ராஜா” என்றும் பெயர் வந்தது…

இப்படியாகத்தான் க்ஷத்ரிய வர்ணம் உருவானது… அவர்கள் மட்டும் க்ஷத்ரியர் ஆனால் பிறர் அல்ல… அவர்களை போல இருந்தவர்களும் க்ஷத்ரியர் ஆனால் பிறர் அல்ல… அந்த அறத்தின்வழி ஒகுகுபவர் க்ஷத்ரியர் ஆனால் பிறர் அல்ல… இப்படித்தான் வசிஷ்டா இந்த க்ஷத்ரியர்கள் இந்த பிறவியிலும் அடுத்த பிறப்பிலும் மேன்மை அடைவார்கள்…

இதன் பிறகு தண்டித்தல் ஒதுக்கிவைத்தல் வாய்மை போன்றவற்றிலேயே சில சில நேரங்களில் தீயவை நடக்க ஆரம்பித்தன… அதனால் தீயவையை ஒதுக்கிவிட்டு வாழ்பவர் ஒருவரை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று அந்த விவசாயிகள் தீயவற்றை ஒதுக்கிவிட்டு தியானம் செய்பவர்களை கண்டுபிடித்தனர்… தீயவற்றை ஒதுக்குவதாலேயே அவர்களுக்கு பிராமணர் என்ற பெயர் வந்தது… அவர்கள் காட்டில் குடிசை கட்டி வாழ்ந்தார்கள்… சோற்றுக்கு ஊருக்கு வந்து பிச்சை (யாசகம்) எடுத்து வாழ்ந்தார்கள்… மீத நேரங்களில் தியானம் செய்தார்கள்… இவர்கள் தியானிப்பதை பார்த்த மக்கள் இவர்களுக்கு ஜாயகர் என்று பட்டம் கொடுத்தார்கள்… பிறகு காலம் செல்லச் செல்ல பிராமணர்கள் ஊர்களிலும் நகரங்களிலும் வந்து தங்க ஆரம்பித்தனர்… தங்கி நூல்கள் தொகுக்க ஆரம்பித்தனர் (தர்ம சாஸ்திரங்களை எழுதுதல்) … பிறகு இதனையே செய்து தியானிப்பது நின்று போனது… தியானிப்பதை நிறுத்திவிட்டு (வேத) மந்திரங்களை ஓத ஆரம்பித்தனர்… அன்று இவர்கள் தியானிப்பதை நிறுத்திவிட்டு ஓத ஆரம்பித்தது எவ்வளவு கீழானதோ அந்த ஓதுதலை இன்று உள்ள பிராமணர்கள் சிறப்பானதாக கருதுகின்றனர்…

இப்படியாகத்தான் பிராமண வர்ணம் உருவானது… அவர்கள் மட்டும் பிராமணர் ஆனால் பிறர் அல்ல… அவர்களை போல இருந்தவர்களும் பிராமணர் ஆனால் பிறர் அல்ல… அந்த அறத்தின்வழி ஒகுகுபவர் பிராமணர் ஆனால் பிறர் அல்ல… இப்படித்தான் வசிஷ்டா இந்த பிராமணர்கள் இந்த பிறவியிலும் அடுத்த பிறப்பிலும் மேன்மை அடைவார்கள்…

இதன் பிறகாக பிராமணர்கள் போலவும் க்ஷத்ரியர்கள் போலவும் இருந்த சமுதாயத்தில் இருந்தே காம இச்சைகளால் தூண்டப்பட்டு பல்வேறு வகையான தொழில்களை மேற்கொண்ட வகுப்பினர் வேஷர்கள் (வைஷ்யர்கள்) என வழங்கப்பட்டனர்…

இதேபோல உடலால் மனதால் செயலால் எண்ணத்தால் பேச்சால் அறவாழ்வு வாழ்ந்த க்ஷத்ரியன் தான் மேற்கொண்ட சரியான பார்வையாலும் செய்கையாளும் அவன் இறந்த பிறகு சொர்க்கம் சென்றான்… அதே போலவே பிராமணன் க்ஷத்தியன் வேஷன் சூத்தன் (பாளி மொழியில்) என இவர்கள் நால்வரும் அவர்களுக்கான தர்மத்தை செய்தே சொர்க்கம் போனார்கள்…

அதே போல் ஒரு க்ஷத்ரியன் உடலால் மனதால் செயலால் எண்ணத்தால் பேச்சால் நல்லது கெட்டது என இரண்டும் கலந்து வாழ்ந்தால் அவனுக்கு அடுத்த பிறப்பில் இன்பம் துன்பம் கலந்த வாழ்வே கிட்டும்… இதே போலத்தான் பிராமணர் வைஷ்யர் சூத்திரர் போன்றோருக்கும்…

இப்படியாகத்தான் வைஷ்ய வர்ணம் உருவானது… அவர்கள் மட்டும் வைஷ்யர் ஆனால் பிறர் அல்ல… அவர்களை போல இருந்தவர்களும் வைஷ்யர் ஆனால் பிறர் அல்ல… அந்த அறத்தின்வழி ஒகுகுபவர் வைஷ்யர் ஆனால் பிறர் அல்ல… இப்படித்தான் வசிஷ்டா இந்த வைஷ்யர்கள் இந்த பிறவியிலும் அடுத்த பிறப்பிலும் மேன்மை அடைவார்கள்…

இவர்கள் (மூன்று வர்ணங்கள்) போக மீதம் இருந்தவர்கள் “லுத்தாச்சாரம் குத்தாச்சாரம் ஆகியவற்றால் சூத்தாச்சாரர் ஆனார்கள்”…

(பின்குறிப்பு:

பாளி மொழியில்,

லுத்த ஆச்சாரம் = பொறாமை கொள்ளும் வழக்கமுடையோர்…

குத்த ஆச்சாரர் = கீழான சிறிய வழக்கமுடையோர்…

சூத்தாச்சாரர் = சூத்திரர் என்று வழக்கில் வந்தனர்…

சில ஆங்கில மொழிபெயர்ப்புகளில் லுத்தாச்சாரர் என்பதை வேட்டையாடுவோர் என தவறாக எழுதியுள்ளார்கள்… பாளி மொழியில் லுத்தா என்றால் பொறாமை , லுத்தகா என்றால் வேடன்… இந்த வித்தியாசம் புரியாமல் தவறாக மொழிபெயர்த்துவிட்டார்கள்… லுத்தா என்ற பொறாமை என்பது தான் காழ்ப்புணர்வு, தாழ்வு மனப்பான்மை, வெறுப்புணர்வு ஆகியவற்றைக்கு மூலகாரணம்… இந்த சின்னபுத்திகாரர்கள் தான் சூத்திரர்…)

இப்படியாகத்தான் சூத்திர வர்ணம் உருவானது… அவர்கள் மட்டும் சூத்திரர் ஆனால் பிறர் அல்ல… அவர்களை போல இருந்தவர்களும் சூத்திரர் ஆனால் பிறர் அல்ல… அந்த அறத்தின்வழி ஒகுகுபவர் சூத்திரர் ஆனால் பிறர் அல்ல… இப்படித்தான் வசிஷ்டா இந்த சூத்திரர் இந்த பிறவியிலும் அடுத்த பிறப்பிலும் மேன்மை அடைவார்கள்…

(பின்குறிப்பு: இங்கே சின்னபுத்தி சூத்திரர்கள் எந்த அறத்தை பின்பற்றவேண்டும் என்று சொல்லப்படவில்லை என்றாலும் மனு தர்ம சாஸ்திரம் சொல்வது போல் அவர்கள் மேல் மூன்று வர்ணத்திற்கும் மனதார சேவக ஊழியம் செய்து அவர்களின் வழிகளை அறிந்து அதற்கு ஏற வேண்டும் என்பதே இங்கு புத்தன் சொல்ல வந்த அவர்களின் ஆச்சாரம் ஆகும்… ஆனால் தமிழகத்தில் இருந்த நடைமுறையே வேறு… மேல் மூன்று வர்ணத்திற்கும் சேவை செய்யவும் இல்லை… தாமஸத்தில் இருக்கவும் இல்லை… ஆனால் பிங்கல நிகண்டு கூறும் சூத்திர வர்ணத்து வேளாளர்களுக்கான சாலச்சிறந்த பத்து வகை தொழில்களினால் அவர்கள் தாமஸம் அண்டாமல், ராஜஸமும் மிகாமல், ஸத்வமே மிகுந்து தேவ நிலையில் லயிப்பார்கள்… அதன் காரணமாக தமிழகத்தில் சூத்திர வேளாளர் குடியில் பிறந்து அந்த 10 வகை தொழிலையும் செய்தாலே தேவலோகம் என்ற சொர்க்கம் வாய்க்கும்… எல்லாம் மூவேந்தர் மகிமை… இதன் வழியாக சூத்திரன் இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் மேன்மை அடைவான்…)

இப்படியாக பிராமணன் க்ஷத்ரியன் வைஷ்யன் சூத்திரன் ஆகியோர் தங்கள் உடலால் மனதால் செயலால் எண்ணத்தால் பேச்சால் அவர்கள் அறத்தில் ஒழுகி நல்லது மட்டுமே செய்தால் அடுத்த பிறப்பில் சொர்க்கத்தில் பிறப்பார்கள், அறம் வழுவி தீயவை செய்தால் நரகத்தில் பிறப்பார்கள்… இரண்டும் கலந்து செய்வோர் இன்பம் துன்பம் கலந்த மனித வாழ்வை அடைவார்கள்..

இந்த நால்வர்ணத்தவர்கள் தங்கள் உடலால் மனதால் செயலால் எண்ணத்தால் பேச்சால் தீயவை செய்தலை தடுத்துவிட்டால் முக்திக்கான ஏழு குணங்களையும் பெற்று இந்த பிறப்பிலேயே மேலே எழுவார்…

(இதன் பிறகு மேலும் சில முக்திக்கான வாசகங்கள் சொல்கிறார் புத்தர்… இங்கு அது தேவையில்லை)

பிரம்மா சனன்குமாரர் (சமஸ்கிருதத்தில் சனத்குமாரர்) சொன்னார் “க்ஷத்ரியனே நால்வர்ணத்திலும் சிறந்தவன் ஏனெனில் அனைத்து குல மக்களையும் வழிநடத்துகிறான்… அவனுக்கு ஞானமும் குலவொழுக்கமும் வாய்க்கப் பெற்றால் தேவர்களிலும் மனிதர்களிலும் சிறந்தவன் அவனே என்ற நிலையை அடைவான்… (அவனே இந்திரன்… அவனே வேந்தன்…)”

பிராமண சனன்குமாரர் (சனத்குமாரர்) சொன்னதில் எந்த தவறும் இல்லை… மிகச் சரியானதே அது… அது எந்த தீங்கையும் விளைவிக்காது, மாறாக நன்மை பயக்கும்… அவரது கருத்தில் நானும் உடன்படுகிறேன்…

ஆகவே நானும் சொல்கிறேன், “க்ஷத்ரியனே நால்வர்ணத்திலும் சிறந்தவன் ஏனெனில் அனைத்து குல மக்களையும் வழிநடத்துகிறான்… அவனுக்கு ஞானமும் குலவொழுக்கமும் வாய்க்கப் பெற்றால் தேவர்களிலும் மனிதர்களிலும் சிறந்தவன் அவனே என்ற நிலையை அடைவான்… (அவனே இந்திரன்… அவனே வேந்தன்…)”

இவ்வாறு புத்தர் சொன்னார்…

புத்தர் சொன்ன இந்த பேருண்மையை வியந்து வாசித்தனும் (வசிஷ்டர்) பரத்வாஜரும் பகுத்தறிவு கொண்டு ஏற்று மெய்சிலிர்த்தனர்…

(பிறகு புத்தன் சரணம் கச்சாமி என புத்தனது பாதத்தில் தங்கள் உச்சந்தலையால் ஆராதித்து மேல் எழுந்தனர்!!!)

தீக நிகாயம் 27 முற்றும்…

///

இப்படியாக புத்தன் வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து வாங்கியது மட்டுமல்லாது அதற்கு முட்டு கொடுத்து தூக்கி நிறுத்தினான் புத்தன்… இன்றைய நாள் வரை இது இலங்கையில் உள்ள வர்ணாஸ்ரமத்தை ஆதரிக்கும் தேரவாத பௌத்த குருமார்களால் செய்யப்பட்ட இடைச்செருகல் என்று ஒரு ஆய்வாளர் கூட பேசவில்லை என்பது கூடுதல் விபரம்… மாறாக இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மேற்குலகினர் சிலர் இந்த தீக நிகாயம் 27 ஆம் சூத்திரமான அக்ஞான சூத்திரத்தையே அந்த நூலில் பதிக்காமல் சில்லறைத்தனம் செய்தனர்… சிலர் பிராமண க்ஷத்ரிய வர்ணங்களின் உருவாத்தை மட்டுமே சொல்லிவிட்டு வைஷ்ய சூத்ர வர்ணங்கள் உருவான விதத்தை புத்தன் கூறியதை பதிக்காமல் சில்லறைத்தனம் செய்தனர்… ஆனால் நான் சும்மா இருப்பேனா? மூலமான பாளி மொழியில் எழுதப்பட்ட மூலநூலையும் தரவிரக்கம் செய்து, முழுமையான உரை எழுதிய நூல்களையும் க்ராஸ்ச்செக் செய்து உங்களுக்கு புத்தன் செப்பிய தப்பில்லாத ஒப்பற்ற வார்த்தைகளை ஊட்டி மகிழ்கிறேன்…
_

மேலே சொன்னதில் இருந்தே சூத்திரர் என்போர் தங்களுக்கு வந்த பொறாமை குணம் காரணமாக வந்த வெறுப்புணர்வும், காழ்ப்புணர்வும், தாழ்வு மனப்பான்மை காரணமாகவே தங்களைத் தாங்களே தாழ்த்திவிட்டனர் ஒடுக்கிக்கொண்டனர் பிதுக்கிக் கொண்டனர் என்பது தெளிவு…

வைஷ்யர்கள் காம இச்சைக்கு ஆளாவார்கள் என புத்தன் பச்சையாக சொல்லியதும், சூத்திரர்கள் பொறாமைக்கு ஆளாவார்கள் என புத்தன் பச்சையாக சொல்லியதும் இங்கே வேதாந்த உபநிஷத்துகள், பகவத்கீதை, சாங்கிய சமயம் போன்றவை தாமஸ குணத்தால் வருபவை என்று சொல்கின்றன… வைஷ்யனுக்கு ராஜஸம் மிகுந்தும், தாமஸம் அதற்கடுத்த நிலையில் இருக்கும் என்பது அவை கூறுவன… சூத்திரனுக்கு தாமஸம் மிகுந்திருக்கும்… சோம்பல் – அதன் காரணமாக வரும் திருட்டுபுத்தி, வெறுப்புணர்வு, காழ்ப்புணர்ச்சி, பொறாமை, முறையற்ற காமம் என இவை அனைத்தும் தாமஸ குணமே… புத்தன் சொல்வது எவ்வளவு சரியாக கோர்வையாக சேர்கிறது பாருங்கள்…

புத்தன் மட்டுமா சொல்கிறான் சின்னப்புத்தி வந்தாலே சூத்திரன் என்று? இல்லை… சாம வேதத்தின் வேதாந்தமான சாந்தோக்ய உபநிஷத் 4.2.3 இல் க்ஷத்ரிய அரசனான ஜானஸ்ருதி துக்கத்தில் இருந்ததால் ரைகவர் அவரை சூத்திரா என்று அழைக்கிறார்… துக்கம் என்பதும் தாமஸ குணத்தால் வருவதே ஆகும்…

ஜானஸ்ருதி துக்கத்தில் இருந்ததால்தான் அவரை சூத்திரா என்று அழைத்ததாக,

1) ஆதி சங்கரர் தனது பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் 1.3.34 இல் உரை எழுதியுள்ளார்…

2) ராமானுஜரும் தனது பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் 1.3.33 இல் உரை எழுதுகிறார்…

3) நிம்பர்க்கரும் தனது பிரம்ம சூத்திர பாஷ்யத்தில் 1.3.34 இல் உரை எழுதுகிறார்…

4) ஆதி சங்கரர் தனது சாந்தோக்ய உபநிஷத் உரையில் 4.2.3 இல், ரைவகர் ஜானஸ்ருதி துக்கத்தில் இருந்த காரணத்தாலோ அல்லது ரைவகரை பணத்தால் வசியப்படுத்தி பிரம்ம ஞானத்தை போதிக்க வைக்க வேண்டும் என்ற ஜானஸ்ருதியின் கீழான எண்ணத்தாலேயோ தான் ரைவகர் ஜானஸ்ருதியை சூத்திரன் என அழைத்தார்… என்று உரை செய்கிறார்…

ஆக எப்படி பார்த்தாலும் தாமஸ குணம் வந்தாலே சூத்திரன் தான்… ஒருவர் குடும்பத்தில் ஒருவர் இறந்தால், குடும்ப உறுப்பினர்கள் வர்ணத்திற்கு ஏற்றார் போல் 10,12,15, 30 நாட்கள் தீட்டு என்றும் கோவிலுக்கு அது முடியும் வரை போகக்கூடாது என்றும் மனு தர்மம் கூறுவதும் இதே காரணத்தால் தான் துக்கம் வந்து சூத்திரத்தன்மை இருக்கும் என… அது ஒவ்வொரு வர்ணத்தின் பக்குவ முதிர்வுக்கு ஏற்ப விரைவில் அந்த துக்கம் விலகும்… நீங்கள் 16 ஆம் நாளிலோ அல்லது 13 ஆம் நாளிலோ இறப்பு தீட்டு கழிக்கும் வழக்கம் உள்ளவர் என்றால் நீங்கள் சூத்திரர் அல்லவே அல்ல… நீங்கள் மேல் மூன்று வர்ணத்திற்கும் சேவை செய்வதை குலத்தொழிலாக கொண்டிப்பவர் இல்லையென்றால் நீங்கள் சூத்திரர் அல்ல…

இதையெல்லாம் தாண்டி நீங்கள் 30 ஆம் நாளில் தீட்டு கழிக்கும் சூத்திரரே என்றாலும், பிங்கல நிகண்டு கூறும் நாலாம் வர்ண வேளாளருக்கான ஆணைவழிநிற்றல் முதலான பத்து வதை தொழிலையும் செய்து வந்தால் நீங்கள் தேவர்கள் நிலையில் நிற்போர் ஆவீர்கள்… உங்களுக்கு தாமஸ குணம் மட்டுமல்ல , ராஜஸ குணமும் கூட உங்களை ஆட்டுவிக்காது… குறைவாகவே இருக்கும்… ஸத்வமே மிகுந்து இருந்தும்… இங்குதான் தமிழக வர்ணாசிரமம் மேன்மை பெருகிறது… மேலே புத்தன் சொன்னது அனைத்தும் வடவிந்திய வழக்கம்… தமிழகத்தில் நாம் மேலே பார்த்த “பொய்யும் வழுவும்” என்ற தொல்காப்பிய சூத்திரம் சொல்வது என்னவென்றால் சூத்திரத்தன்மை வந்து மேல் மூன்று வர்ணமும் நாலாம் வர்ணம் ஆனது… ஆனால் நாலாம் வர்ணமாக நின்றவர்களுமே கூட சின்னப்புத்தி வராமல் தடுக்க பத்து வகை செயல்களை உடலாலும் உள்ளத்தாலும் செய்கிறார்கள் என்று கொள்ள வேண்டும்…

அம்பேத்கர் பௌத்தராக மாறினார்… ஆனால் தான் மாறிய மதத்து முதல்வனே சனாதன தர்மத்திற்கு வக்காலத்து வாங்கியவன் என்பதை அறியாமல் போய்விட்டார்… அறம் வழுவிய நால்வர்ணத்தினை எதிர்த்தான் புத்தன் சரி… ஆனால் அறம் வழுவாது நின்றால் சொர்க்கம் நிச்சயமே என்பதையும் புத்தன் கூறியுள்ளான் என்பதையும் அறியாமல் போய்விட்டார்…

_

இங்கே நால்வர்ணத்தில் உயர்ந்த வர்ணமாக புத்தன் க்ஷத்ரியரையே வைத்தான் என பார்த்தோம் அல்லவா… தேரவாத பௌத்தத்தின் மூல நூலான மஜ்ஜிம நியாயத்தின் மூன்றாம் பாகமான பரிபாஜக வக்கத்தின் 72 ஆம் சூத்திரமான Aggi-Vacchagotta Sutta த்தில் புத்தன் சொன்ன வர்ணாசிரம அடுக்கு “க்ஷத்ரியர், பிராமணர், வைஷ்யர், சூத்திரர், சண்டாளர், மிலேச்சர்” என்பதே… அதேபோல தேரவாத பௌத்த மூல நூலான அங்குதார நிகாயத்திலும் 81.9 (Pahārādasutta / பஹாராதசுத்தம்) இல் புத்தன் சொன்ன வர்ணாசிரம அடுக்கு என்பது “க்ஷத்ரியர்கள், பிராமணர்கள், வைஷ்யர்கள், சூத்திரர்கள்” என்பதே… மேலே உள்ள ஐந்தாம் நிலையான சண்டாளர் என்பது பஞ்சமர் என்ற தீண்டத்தகாதவர்களாக முன்னர் இருந்தவர்கள் ஆவார்கள்… மேலே புத்தன் சொன்ன க்ஷத்ரியர்களுக்கான அறத்தில் ஒதுக்கிவைத்தல் என்று வந்ததே அது இவர்களைத்தான்… அறவழி விதி எதுவென தெரிந்தும் தனது கன்மத்தால் தன்னைத்தானே தாழ்த்தியும் ஒடுக்கியும் கொண்டவர்களே சண்டாளர்கள் ஆவார்கள்… அதற்குத்தான் அரசன் தண்டனை வழங்கினான்… அதுவே புத்தன் சொன்ன மேலே பார்த்த தர்மம்… இவர்களுக்கு இருக்கும் சண்டாளத்தன்மையால் அவர்களை / அவர்களுக்கு பிறப்பாரையும் வர்ண நீக்கம் செய்து ஒதுக்கிவைத்து ஆற்றிய அறத்திற்குத்தான் அவன் சொர்க்கம் போவான்… பிறப்பால் வர்ணம் வருவதில்லை என்பது புத்தனது வாதம் ஆனால் அது இங்கே வேண்டாம்…

சூத்திரர் பற்றி மட்டும் பார்ப்போம்…_

மேலே புத்தன் சொன்னான் அல்லவா லுத்தாச்சாரம் என்ற பொறாமை காழ்ப்புணர்வு வெறுப்புணர்வு ஆகியவை வந்த மேல் மூன்று வர்ணத்தவரும் சூத்திரர் ஆவார்கள் என்று… அதுபோக குத்தாச்சாரம் என்ற கீழான செய்கைகளையும் சொன்னால் அல்லவா… அதை தொல்காப்பியமும் பேசுகிறது…

தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் 3&4 ஆம் சூத்திரங்களாவன,

3) மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே

&

4) பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப

என்ற சூத்திரங்கள்… இதற்கு உரையாசிரியர்களான இளம்பூரணர் நச்சினார்க்கினியர் போன்றோர் முதல் சங்க காலத்தில் கரணம் நால்வர்ணத்திற்கும் இருந்தது… அதன் இறுதியான முதல் ஊழியில் அது தவிர்ந்துபட்டு பிறகு இரண்டாம் சங்க கால துவக்கத்தில் மீண்டும் ரிஷிகளால் கரணம் வேளாண் மாந்தர்க்கும் மீண்டும் நிறுவப்பட்டது என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் தான் பொய் பேசுதல் ஏமாற்றுதல் போன்றவை நடந்தது என்றும் கூறுகிறார்கள்…

ஆனால் புத்தன் சொன்ன வார்த்தையின் படி இதன் உண்மைப் பொருள் முதல் சங்க காலத்தில் நாலாம் வர்ணமே இல்லை என்றும், பிறகு மேல் மூன்று வர்ணத்தில் இருந்து பொய்யும் வழுவும் தோன்றியதால் அதில் இருந்து பிரிந்து உருவான நாலாம் வர்ணத்திற்கும் மேல் மூன்று வர்ணத்திற்கு உரிய கரணமும் உரியதாக்கப்பட்டது என்றும் கொள்வதே சரியாகும்…

இங்கே தமிழகத்தில் மேல் மூன்று வர்ணத்திற்கும் சின்னப்புத்தி வந்து அதன் காரணமாக நாலாம் வர்ணம் ஆகி நாலாம் வர்ணமாகவே நிலைநின்றார்கள் என்றாலும் மேலே நாம் பார்த்தது போல பிங்கல நிகண்டு சொல்லும் சூத்திர வர்ணத்து வேளாளர்களுக்கு ஆன பத்து வகை செயல்களினால் இந்த சின்னப்புத்தியை தூண்டும் தாமஸம் வராமலேயே தடுத்துவிடும்… ராஜஸம் கூட குறைவாகவே நிற்கும்… இந்த வகையில் சூத்திர வர்ணத்து வேளாளர்களும் ஸத்வம் மிகுந்து தேவர்கள் நிலையிலே உள்ளவர்களாகவே இருப்பார்கள்‌‌…
_

சரி… அடுத்து மனு தர்மம் கூறும் ஏழு வகையான சூத்திரர் உருவாக்கம் பற்றி பார்ப்போம்… அது புத்தன் சொல்லோடு ஒத்துப்போகிறதா என…

மனு தர்ம சாஸ்திரம் 8.415

சமஸ்கிருதம்:

ध्वजाहृतो भक्तदासो गृहजः क्रीतदत्त्रिमौ ।
पैत्रिको दण्डदासश्च सप्तैते दासयोनयः ॥ ४१५ ॥
,

English Transliteration:

dhvajāhṛto bhaktadāso gṛhajaḥ krītadattrimau |
paitriko daṇḍadāsaśca saptaite dāsayonayaḥ || 415 ||
,

Tamil Transliteration:

த்வஜாஹ்ருʼதோ பக்ததா³ஸோ
க்ருʼஹஜ: க்ரீதத³த்த்ரிமௌ ।
பைத்ரிகோ தண்ட³தாஸஶ்ச
ஸப்தைதே தாஸயோநய:
,

Clarification:

த்வஜம் = கொடி…

ஆஹ்ருதோ = எடுத்துக்கொள்ளப்பட்ட…

பக்த தாஸோ = பக்தியினால் மனமுவந்து ஆசையாக ஊழியம் செய்கின்றவன்…

க்ருஹஜ = வீட்டிற்கு சேர்ந்தவன்… (க்ருஹஜன / गृहजन = குடும்ப உறுப்பினன்)

க்ரீதத³த்த்ரிமௌ = வாங்கப்பட்டவன் & கொடுக்கப்பட்டவன்… (க்ருததாஸ / कृतदास = குறிப்பிட்ட காலத்திற்கு அடிமை)…

பைத்ரிகோ = பரம்பரை பரம்பரையாக (பித்ரு = தந்தைவழி)…

தண்ட³தாஸஶ்ச / தண்ட தாஸஸ்ச = தண்டனையால் தண்டிக்கப்பட்டு அடிமையானவன்…

ஸப்தைதே = ஏழு வகையான

தாஸயோநய = அடிமைகள் ஆவார்கள்…
,

Translation:

ஏழு வகை தாசர்கள் யாரெனில்,

1) கொடியை பிறரிடம் இழந்தவர்கள்… அதாவது இங்கே போரில் தோற்று, சுயமாக ஆளும் தகுதியை இழந்த அரசர்கள் தாசர் / சூத்திரர் ஆவார்கள்…

ஆக இங்கே கொடியை விருதாக வேந்தனால் பெற்றிருந்தால் கூட அவன் அரசனே ஆவான்… ஒளிநாட்டு ஒளியர் என்ற அரசர்களை சோழன் வீழ்த்தி வேளாளர் ஆக்கி பிறகு அவர்களுக்கு பிற தேசங்களில் அரசாளும் உரிமை கொடுத்தான் என்று நச்சினார்க்கினியர் பட்டினப்பாலைக்கு உரை எழுதுகிறார்… இங்கே சூத்திரத்தன்மை சில காலம் தான் நீடித்தது… ஒளியர் மீண்டும் ஒளியரசர்களாகவே ஆயினர்… வேளாளர் என்ற பெயர் ஒட்டிவிட்டாலும் வர்ண்தத்தால் அவர்கள் க்ஷத்ரியரே… இதுபோல எண்ணற்ற சான்றுகள் உண்டு… மேதாதிதி என்ற உரையாசிரியர் மட்டும் போரில் தோற்றால் சூத்திரன் ஆக மாட்டார்கள் என்று எழுதினார் ஆனால் தமிழகத்தில் இருந்த நடைமுறை முற்றிலும் வேறு… போரில் தோற்றவனுக்கு வெறுப்புணர்வு காழ்ப்புணர்ச்சி பொறாமை ஆகியவை வரும்தானே! ஆக இங்கேதான் சூத்திரத்தன்மை பிறக்கிறது… வீழ்குடி உழவர்களை வேளாண் சாமந்தர் என அடியார்க்கு நல்லார் உரை எழுதுகிறார்… வீழ்ந்தவனே சாமந்தன் / சிற்றரசன் என்றால் முன்னர் ஆண்டவன்? இப்படி எண்ணற்ற சான்றுகள் உண்டு… எல்லாம் இங்கு வேண்டாம்…

2) பக்தியினால் மனமுவந்து ஆசையாக ஊழியம் செய்கின்றவன்… இதுதான் மனு தர்மம் கூறும் மூன்று வர்ணத்துக்கும் சேவை செய்யும் சூத்திர மரபு… மேலே புத்தன் சொன்னது போல பொறாமை காழ்ப்பு வெறுப்புணர்வு வந்ததால் சூத்திரர் ஆனவர்களுக்கு இந்த வழியும் சிறந்ததே ஆகும்…

3) வீட்டிற்கு சேர்ந்தவன்… வீட்டிற்கு சேர்ந்தவன் எப்படி சூத்திரனாக இருக்க முடியும்? பிற வர்ணத்து பெண்களுடன் கூடி கலந்தாலுமே கூட பிறக்கின்ற குழந்தைக்கு அநுலோமர் பிரதிலோமர் பிறப்பு தான் வரும் … ஆனால் சூத்திரன்? எப்படி? இங்கே தான் விஷயமே உள்ளது… தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 26 ஆம் சூத்திரத்தில் காதலர்களுக்கிடையே என்னவெல்லாம் இருக்கக்கூடாது என இலக்கணம் வகுக்கிறார் தொல்காப்பியர்… இதில் முதலாவது நிம்பிரி என்ற அழுக்காறு… அதாவது பொறாமை… அதேதான் – இவள் என்னை விட ஒருவகையில் குலத்தில் பெரியவள், என்னைவிட ஒருவகையில் அழகானவள், என்னைவிட ஒரு வகையில் பணத்தில் பெரியவள் என்ற பொறாமை தான் அது… இது காழ்ப்புணர்ச்சியினை உண்டு பண்ணும்… பெண் மீது பொறாமை கொண்டு ஒரு ஆண் புணர்வதால் உருவாகும் கருவில் பிறப்போர் தான் காழ்ப்புணர்ச்சிவாதிகள் / காழ்ப்புணர்ச்சிக்கு பிறந்தவர்கள் ஆவார்கள்… சூத்திரன் பிராமணத்தியை புணர்ந்தால் சண்டாளன் பிறப்பான் என மனு சொன்னதற்கு காரணமும் இதுதான்… அதிக காழ்ப்பு சண்டாளச் சிசுவையே உண்டுபண்ணும்… இது புரியாமல் பிற்கால உரையாசிரியர்கள் “வேசிமகன்” தான் சூத்திரன் என எழுதிவிட்டனர்… சுத்த சண்டாளத்தனம்… உயர் வர்ணத்தவனுக்கு வேசியால் பிறந்தவனுக்கும் முறையானவளுக்கு பிறந்தவன் மீது பொறாமை காழ்ப்பு வெறுப்புணர்வு எல்லாம் இருக்கும்தான்… ஆனால் சோழர் காலத்திய சித்திரமேழி நாட்டார்கள் மெய்க்கீர்த்தி குறிப்பிடும் பூதேவி புத்திரர்களான நால்வர்ணத்தையும், சோழர் கால பிங்கல நிகண்டு குறிப்பிடும் மண்மகள் புதல்வரான பெரும்பான்மை வேளாளரில் சிறுபான்மையாக இருந்த சூத்திர வகையினரையும் வேசிமகன் என்றால் பெருமாள் மனைவியான பூதேவியையே வேசி என்று சொல்வது போல் ஆகும் அல்லவா? ஈவேரா இதற்கு என்ன சொல்வார் ? இதை ஈவேரா கையில் எடுத்துக்கொண்டு ஆடிய ஆட்டம் என்ன?

4) ஒருவனால் வாங்கப்பட்டவன்… இங்கே விலைக்காகவோ பரிசாகவோ என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்…

5) ஒருவனால் கொடுக்கப்பட்டவன்… பரிசாகவோ விலைக்கோ…

6) பரம்பரை பரம்பரையாக ஊழியம் செய்கிறவன்… அதாவது அடிமையின் மகன் அடிமை என்ற முறை… பிறப்பால் வருவது… புத்தர் இந்த பிறப்பால் வரும் ஏற்ற தாழ்வைத்தான் இந்த காலத்துக்கு ஒத்துவராது என எதிர்த்தார்…

7) தண்டனையால் தண்டிக்கப்பட்டு அடிமையானவன்… அறம் வழுவிய நால்வர்ணத்தாரை க்ஷத்ரியன் தண்டித்து தன் அறத்தை நிலைநிறுத்துவான் அல்லவா… அவர்கள் அடிமை ஆவார்கள்… இங்கே மேல் மூன்று வர்ணத்திறக்குமே சேவை செய்யும் ஊழியனாக என்று பொருள் கொள்ள வேண்டும்…
_

இப்படியாக ஏழு வகை தாசர்கள் உள்ளனர் என மனு கூறுகின்றார்…

இதெல்லாம் புரியாமல் சண்டாளபுத்தி கொண்டோர் ஆடிய ஆட்டம் என்ன? வேடிக்கையாக இல்லையா???

வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் என்பதைப்போல வசிஷ்டரை சீடராகக் கொண்டதாக பௌத்தம் கூறும் அவரது குருவான புத்தனது வாயால் வர்ணாசிரம தர்மத்திற்கு குற்றமில்லாதது என்று பட்டம் தந்துள்ளான்… இது தெரியாமல் எத்தனை எத்தனை பொய்கள்! பிரச்சாரங்கள்! ஒன்று விடாமல் தவிடுபொடியாகும்…

ஒடுக்கிவிட்டனர் தாழ்த்திவிட்டனர் பிதுக்கிவிட்டனர் என்று பொய் சொல்லிய தீவிரவாதிகளை நம்பி அதே பொய்யை உண்மையென்று கருதி சொல்லிக் கொண்டிருக்கும் அத்தனை தலித்தியவாதிகளும் புத்தன் சொன்னதைக் கேட்டு புத்தியில் ஸத்வத்தை ஏற்றுவார்களாக…

கட்டுரையாளர்  மற்றும் எழுத்தாளர்: 

கொங்கு வேளாளர்

ஜெய்வந்த் செல்வக்குமார் கவுண்டர்

மேலும் தொடர்புக்கு :

ஒட்டப்பிடாரம் கார்த்தி சங்கர் பிள்ளை 9629908758 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *