ஆரிய வெள்ளாளர்கள் (ஆரியர்) :
ஆரிய வெள்ளாளர்கள் (வேளாளர்கள்) :
ஆரிய வெள்ளாளர்கள் என்போர் வெள்ளாளரில் வரும் ஒரு உட்பிரிவினர் ஆவர்!!

இந்த ஆரிய வெள்ளாளர்கள் முன்னர் கன்னியாக்குமரி முதல் பழனி வரை பரவி வாழ்ந்துள்ளனர், தற்காலத்தில் இவர்கள் பழனி நகரையே, அதாவது பழனி முருகன் கோவிலையே தங்களது தலைநகரம் போல் கொண்டு ஆரிய வெள்ளாள சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்!!
ஆரிய வெள்ளாளர்கள் தமிழக அரசின் சாதி பட்டியலில் முற்படுத்தப்பட்ட பிரிவில் (Forward Caste) வரிசை எண் 705 ல் ஆரியர் என்ற பெயரில் வருகின்றனர்!!
ஆரிய வெள்ளாளர்கள், மற்ற வெள்ளாளர்களை போலவே பிள்ளை பட்டத்தையே பயன்படுத்துகின்றனர்!! முன்னர் காலத்தில் அரசர்களுக்கு மட்டும் சித்த வைத்தியம் பார்த்ததாகவும் இவர்கள் தங்களை கூறி கொள்கின்றனர்!! மேலும் பரம்பரை சித்தவைத்திய கலைக்கான பழங்கால குறிப்புகளை தற்பொழுதும் கூட சில ஆரிய வெள்ளாளர்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்து பாதுகாத்து வருவதாக தகவல்!!
இராஜபாளையத்தில் அரசாண்ட சஷத்திரிய ராஜீஸ்களின் அரசில் கணக்கு பிள்ளையாகவும், நாட்டாமையாகவும்
இராஜபாளையம், சாத்தூர், விருதுநகர் பகுதிகளில் இருந்துள்ளதாக நம்மிடம் தெரிவிக்கின்றனர்,
மேலும் கன்னியாகுமாரி, திருநெல்வேலி டவுண், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளிலும் வாழ்ந்துள்ளனர்!!
ஆரிய வெள்ளாளர்களின் தாலியின் பெயர் குமிழ் ஆகும், அந்த தாலியின் புகைப்படம் கீழே :
ஆரிய வெள்ளாளர்கள் சைவ உணவு முறை பழக்கத்தையே கொண்டுள்ளனர்!! அசைவம் உண்பதில்லை, தங்களது குலத்தெய்வம், வீட்டுத்தெய்வம் என தாங்கள் கட்டிய கோவில் தெய்வங்களுக்கு ஆரிய வெள்ளாளர்கள் அசைவ படையல் படைப்பதில்லை!!!

ஆரிய வெள்ளாளர்கள் தங்களது திருமண முறையை கொங்கு வெள்ளாளர்கள், பாண்டிய வெள்ளாளர்கள் போல கூட்டமுறையை பயன்படுத்தி திருமணம் பேசி முடித்து திருமணம் புரிகின்றனர்!!! இந்த இடத்தில் கூட்டம் என்பது கோத்திரம் ஆகும், கூட்டம் என்பது தமிழ்சொல், கோத்திரம் என்பது சமஸ்கிருத சொல்லாடல் ஆகும்!!
ஒரே கூட்டத்தை சார்ந்த ஆரிய வெள்ளாளர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொள்வதில்லை, வேற வேற கூட்டத்தை சார்ந்த ஆரிய வெள்ளாளர்கள் மட்டுமே திருமணம் புரிகின்றனர்!!
ஆரிய வெள்ளாளர்களின் (வேளாளர்கள்) கூட்டப்பெயர்கள் பின்வருமாறு :
1. வண்டிக்காரன் கூட்டம்
2. கணக்குபிள்ளை கூட்டம்
3. சப்பாணி கூட்டம்
4. பண்ணைக்கார கூட்டம்
5. ஓவள கவுண்டன் கூட்டம்
6.பண்டுத்தாரர் கூட்டம்











பெயரிலே ஆரியர் இருக்கும் போது இவர்கள் தமிழ்க்குடி என்று சொல்ல முடியுமா